• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

வர்மம்

வர்ம கலை என்பது இந்திய பாரம்பரிய கலையாகும். இது இந்தியாவின் தென்கோடியான இன்றைய கன்னியாகுமரியில் உருவானது.

சித்தர்களின் மரபில் வர்மம் என்றால் “உயிர் நிலைகளின் ஓட்டம்” என்று பொருள். உடலில் மொத்தம் 108 வர்ம நிலைகள் (புள்ளிகள்) வரையறுக்கப்பட்டுள்ளன. நமது உடலில் உயிர் ஆற்றல் தங்கியிருக்கும் புள்ளிகள், வர்ம புள்ளிகளாக அடையாளம் காணப்படுகின்றன. உடலெங்கும் பரவியுள்ள வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன.

உடலெங்கும் பயணிக்கும் இந்த வர்ம ஆற்றல் காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்தவோட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் ஒழுங்கு செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

இவையே மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை பாதிக்கப்படுகின்றன.

உள்ளங்கைகள், விரல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த புள்ளிகளைத் தூண்டி நோய்களைக் குணப்படுத்துவதே வர்மம் மருத்துவ முறையின் அடிப்படை நோக்கமாகும்.

இவை ஆற்றலைத் தூண்டவும், நோயைக் குணப்படுத்தவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டவும் பயன்படுத்தப்படுகின்றன.

வர்மம் என்பது மசாஜ், மாற்று மருத்துவம், பாரம்பரிய யோகா மற்றும் தற்காப்புக் கலைகளை ஒருங்கிணைக்கிறது.

ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, ஆர்த்ரைடிஸ், மூட்டு நழுவல், நீரிழிவு, தூக்கமின்மை, மன அழுத்தம், கருப்பை மற்றும் மாதவிலக்கு பிரச்னை, சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம், நரம்புக் கோளாறு, தண்டுவட கோளாறுகள், மூட்டுக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை வர்ம சிகிச்சையால் குணப்படுத்திவிட இயலும்.

வர்மத்தின் வகைகள்

வர்மம் கலையின் நன்மை என்னவென்றால், ஹோமியோபதி, சித்தா மற்றும் ஆயுர்வேதம் போன்ற பிற மருத்துவ முறைகளுடன் இணைந்து இது நன்றாக வேலை செய்கிறது.

×