• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

மருத்துவமனை வரலாறு

Dr. S. நமசிவாயம், M.B.B.S., D.C.H., குழந்தைகள் மருத்துவர் அவர்களால் 1960 களில் குழந்தைகள் நல மருத்துவமனையாக “சிவா மருத்துவமனை” தொடங்கப்பட்டது.

குழந்தைகள் மருத்துவத்தில் தனி முத்திரையையும், கைராசி மருத்துவர்என பெயர் பெற்ற அவருக்கு, 1975 ம் வருடத்தில் அவருக்கு, அவருடைய நோயாளி ஒருவரின் வாயிலாக “மருத்துவ அதிசியம்” (Medical miracle) ஒன்றை காண நேர்ந்தது.

அவருடைய ஆங்கில மருத்துவ அறிவு மற்றும் அனுபவ அறிவின்படி குணப்படுத்தவே முடியாது என பட்டியலிடப்பட்ட பல நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பிறந்ததில் இருந்ததே அவதிப்பட்டுக் கொண்டிருந்த 10 வயதுடைய, அவருடைய நோயாளி, ஹோமியோ மருத்துவத்தால் பூரணமாக குணமானதை கண்டார்.

அந்த ஆச்சரியத்துடன், நம் மருத்துவத்தில் இல்லாத சிறப்பு, ஹோமியோ மருத்துவத்தில் என்ன இருக்கின்றது என்ற தேடல் துவங்கியது.

ஹோமியோபதி புத்தகங்கள், மருந்துகளை டெல்லி, கல்கத்தா நகரங்களில் இருந்து தருவித்தார். ஹோமியோ மருத்துவத்தின் தத்துவங்கள், செயல்திறனை புரிந்துகொண்டு, அவருடைய நோயாளிகளுக்கு ஹோமியோ மருந்துகளை கொடுக்க ஆரம்பித்தார். சில காலத்திற்கு பின்பு தீராத நோய்கள் குணமாவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தது மட்டுமல்லாமல், அவரும் பல மருத்துவ அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.

அவருக்கு மாற்று மருத்துவத்தின் மேல் இருந்த தவறான கண்ணோட்டம் முற்றிலும் மாறியது. இனி வரும் காலங்களில் ஹோமியோ, சித்தா,ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது.

தன்னுடைய மகன் Dr முத்தையன் அவர்களை, மருத்துவ கல்லூரியில் சேர்த்து ஹோமியோ மருத்துவர் ஆக்கினார்.

1991 ஆம் ஆண்டு Dr. முத்தையன் அவர்களால், “சிவா ஹெல்த் கிளினிக்” என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை பின்பு சில வருடங்களில் அவருடைய தலைமையில், ஒத்த சிந்தனையுடைய அணைத்து மருத்துவமுறை மருத்துவ நண்பர்களின் அர்ப்பணிப்போடு, ஒருங்கிணைந்த மருத்துவ சித்தாந்தத்தை ஆராய்ந்து செயல்படுத்தும், “சிவா ஹெல்த் கிளினிக் மற்றும் ரிசர்ச் சென்டர்” என்ற மருத்துவ ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்பட்டது.

இப்போது, இனி வருங்காலத்தில் மருத்துவ உலகத்தை ஆளப்போகும் மருத்துவமான, ஒருங்கிணைந்த மருத்துவத்தின் அடிப்படையில், ஆயுஷ் மற்றும் அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து குணமளிக்கும், “சிவா ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்” என்ற ஆராய்ச்சி மருத்துவமனையாக மனிதகுலத்திற்கு நன்மை செய்து கொண்டு வருகின்றது.

×