• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

குழந்தைகளின் விரைவாதம்
(Hydrocele In Children)

ஆண் குழந்தைகளுக்கு, விதைப்பையின் (Scrotum) உள்ளே உள்ள விரைகளில் (Testes) ஒன்றில் மட்டுமோ அல்லது இரண்டு விரைகளையும் சுற்றியுள்ள பகுதியில் ஒரு விதமான நீர் கோர்த்துக்கொண்டு காணப்படுவதே விரைவாதம் அல்லது விரைவீக்கம் (Hydrocele) எனப்படுகின்றது.

இந்தக் குறைபாட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. குழந்தை தாயின் வயிற்றின் உள்ளே இருக்கும்போதும் ஏற்படலாம். (Congenital Hydrocele)

2. எந்த வயதிலும் ஏற்படும் வகை (Acquired Hydrocele)

இது பார்ப்பதற்கு, குழந்தையின் விதைப்பைக்குள் திரவம் நிரப்பப்பட்ட சிறிய பலூன் போல காணப்படும் விரைவாதம் மென்மையாகவும், வலியற்றவையாகவும் இருக்கும்.

விரைவாதம் இருப்பதை மருத்துவர்கள் பார்த்து, சோதனை செய்து கண்டுபிடித்து விடுவார்கள். சில சமயங்களில் சந்தேகம் ஏற்படும் போது ஸ்கேன் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.

குறை மாதத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு, விரைவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விரைவாதத்தின் வகைகளை பொறுத்து, விரையின் வீக்கம் சில சமயங்களில் சிறிதாகவும், சில சமயங்களில் பெரிதாகவும் காணப்படும்.

பிறப்பிலேயே ஏற்படும் விரைவாதத்தின் அறிகுறி சில சமயங்களில் குடல் இறக்கத்தில் காணப்படும் அறிகுறி போன்றே தோற்றமளிக்கும். சில குழந்தைகளுக்கு விரைவாதம் மற்றும் குடல் இறக்கம் [ Hernia ] இரண்டும் சேர்ந்தே காணப்படுவதும் உண்டு.

காரணங்கள்

  • விதைப்பைக்குள் மிக அதிகமான அளவு நீர் சுரப்பது.
  • இயல்பாகவே அதிகமாக உள்ள நீரை உறிஞ்சக்கூடிய உறுப்பின் செயல்பாடு முழுமையாக இல்லாமல் போவது.
  • நிணநீர் நாளங்களில் காணப் படும் நீர் விதைகளில் சேர்வது.
  • பிறப்பிலே ஏற்படும் விரை வாதம் எனும்போது அடிவயிற்றிற்கும் (Peritoneal Cavity) விதைப்பைக்கும் இடையே உள்ள ஜவ்வுகள் இணையாததால் அடிவயிற்றில் உள்ள நீர் விதைப்பைக்குள் இறங்கி காணப்படும்.

அறுவை சிகிச்சை தேவையில்லை

குழந்தைகளுக்கு இருக்கும் விரைவாதம் அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்யப்படுகின்றது.

ஆனால் விரைவாதம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், பிறக்கும்போதே இருப்பது அல்லது இடையில் ஏற்பட்டது என்று எந்த வகையாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே ஹோமியோ, சித்தா, ஆயுர்வேத மருந்துகளை ஒருங்கிணைத்து கொடுக்கும் போது அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்துகள் மூலம் குணப்படுத்தி விடலாம்.

இந்த கூட்டு மருத்துவத்தின் செயல்பாடு, விரைப்பையில் அதிகமாக சேர்ந்துள்ள நீரை உறிஞ்சி வெளியேற்றுவது மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் விரைவாதத்தில், ஜவ்வுகளை இணைப்பது என்ற வகையில் இருக்கின்றது.

குழந்தைகளுக்கு இந்த மருந்துகளை கொடுக்கலாமா? இந்த மருந்துகளால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்புகள், பின்விளைவுகள் ஏற்படுமா? என்ற சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இயற்கையான இந்த ஒருங்கிணைந்த கூட்டு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. எந்தவிதமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது. மேலும் இந்த மருந்துகள் உடலுக்கு சேராததால் அலர்ஜி (Allergy) ஆகிவிட்டது என்ற பிரச்னைக்கும் இடமில்லை.

விரைவாதம் மற்றும் குடல் இறக்கம் இருக்கும் என இரண்டு குறைபாடுகளும் இருக்கும் குழந்தைகளுக்கு, ஒரே சமயத்தில் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம்

அறுவை சிகிச்சைதான் தீர்வு என கூறப்படும் பல குறைபாடுகள் மற்றும் மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம், ஆனால் நோயை பூரணமாக குணப்படுத்த முடியாது என கூறப்படும் பல நோய்களை இந்த ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவத்தால் பூரணமாக குணப்படுத்த முடியும்.

×