• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

ஆஸ்துமா

1) ஆஸ்துமா என்றால் என்ன?

கணை, இழுப்பு, வீஸிங் என பல்வேறாக அழைக்கப்படும் ஆஸ்துமா என்பது நுரையீரல்களை மீண்டும் மீண்டும் பாதிக்கக் கூடிய ஒரு நோய். ஆஸ்துமா தாக்குதலின் போது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்கள் சுருங்குவதாலும், அதிகமான சளி சுரப்பதினாலும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

2) யார் யாருக்கு ஆஸ்துமா ஏற்படுகின்றது?

பிறந்த குழந்தை முதல் எந்த வயதில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடிய இந்த நோய் குழந்தைகள் பெரியவர்கள் ஆனாலும் விடாது. ஆயுள் முழுவதும் அதன் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஆஸ்துமா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஒட்டும் நோய் அல்ல.

3) ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

ஆஸ்துமா பரம்பரை வழியாக வரும் குடும்ப வம்சா வழி சொத்து எனலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வர வேண்டும் என்பது இல்லை. குடும்பத்தில் ஒரு சிலர் தான் பாதிக்கப்படுகின்றனர்.

பரம்பரை இல்லாமலும் ஆஸ்துமா வரலாம். இதற்கு அலர்ஜி மற்றும் சுற்றுப்புற சூழலும், நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியமான காரணங்கள்.

பரம்பரையாக இருந்தாலும், மற்ற காரணங்களாக இருந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதினால் தான ஆஸ்துமா ஏற்படுகின்றது.

4) ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள் யாவை?

– குளிர் காற்று. – திடீரென மாறும் பருவநிலை மாற்றங்கள். – ஒட்டடை மற்றும் பொருட்களில் நெடுநாள் படிந்துள்ள தூசிகள். – அலர்ஜியை தூண்டும் பொருட்களான மலர்களில் உள்ள மகரந்தம் சிற்றுண்ணிகள், பூஞ்சை மற்றும் எல்லா தூசிகளும். – செல்லமாக வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளின் முடிகள். – சமையலில் தாளிக்கும் நெடி, ஊதுபத்தி, சாம்பிராணி, சென்ட் போன்ற வாசனைகள். – சிகரெட் புகை, பெட்ரோல், டீசல் புகை. – கோபம், பயம், கவலை போன்ற உணர்வுகள். – மன அழுத்தம் போன்ற மன ரீதியான உளைச்சல்கள். – உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயற்பாடுகள்.

5) ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன?

ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் பொதுவாக பகலில் இருப்பதை விட இரவில் தான் அதிகரித்து காணப்படுகின்றது.

  • இருமல் (Cough) : ஆஸ்துமா இருமல் சாதாரண இருமலைப் போல இல்லாமல், தொடர்ச்சியாகவும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகரித்தும் காணப்படலாம்.
  • இளைப்பு (Wheezing) : சுவாசம் இயல்பாக இல்லாமல் மூச்சு இழுப்பதற்கும், விடுவதற்கும் சிரமமாக இருக்கும்.
  • சத்தம் (Whistling Sound) : மூச்சு விடும் போது விசிலடிப்பது போன்ற சத்தம் நெஞ்சில் இருந்து ஏற்படும்.
  • இறுக்கம் (Chest Tightness) : நெஞ்சில் யாரோ ஏறி இருப்பது போன்றோ, பாரம் இருப்பது போன்ற உணர்வு.

6) ஆஸ்துமாவினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

நாள்பட்ட ஆஸ்துமாவினால் நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை இழந்து விடுவதால் நுரையிரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு நோய்கள் நுரையீரலை எளிதாக தாக்கலாம்.

இயல்பான மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையில் வாழ்வதை இழந்து எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ( பிடித்த உணவு. குளிர்பானங்கள், தயிர், பனி, மழை, Etc ) ஒதுங்கி வாழ்வது.

பொதுவாகவே ஆஸ்துமா நோயாளிகள் வாழ்நாள் முழுவதுமே, தினமும் மருந்து எடுத்துக் கொண்டால் தான் இருக்க முடியும் என்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். மேலும் வயது அதிகரிக்க அதிகரிக்க மருந்துகளின் செயல்தன்மை குறைந்து கடைசியில் மருந்துகள் வேலை செய்யவில்லை என்ற கொடுமையான நிலையை அடைந்து விடுகின்றனர்.

7) ஆஸ்துமாவிற்கு என்ன சிகிச்சை உள்ளது?

ஆஸ்துமாவிற்கான சிகிச்சை முறையை இரண்டு வகைப்படுத்தலாம்.

  • தொல்லையின் போது உடனடி நிவாரணம்
  • ஆஸ்துமா திரும்ப வராமல் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை.

இதில் உடனடி சிகிச்சை முறைகளான கட்டுப்படுத்தும் மருந்துகள், இன்ஹேலர்கள் (Inhaler), நெபுலைசர்கள் (Nebuliser) போன்றவற்றை தான் பெரும்பாலான ஆஸ்துமா நோயாளிகள் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொண்டு உள்ளார்கள்.

இதன் காரணமாக வயது அதிகமாக அதிகமாக எடுத்துக் கொள்ளும் மருந்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வந்து மருந்து / இன்ஹேலர் இல்லாமல் ஒரு பொழுது கூட இருக்க முடியாது என்ற நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல் மருந்துகள் உண்டாக்கும் பக்க மற்றும் பின்விளைவுகளால் ஏற்படும் தொந்தரவுகளையும் தனியாக அனுபவித்து வருகின்றனர்.

8) ஆஸ்துமாவை பூரணமாக குணமாக்க முடியுமா?

ஒருங்கிணைந்த கூட்டு வைத்திய முறையினால் ஆஸ்துமா திரும்ப வராமல் தடுத்து பூரணமாக குணப்படுத்த முடியும்.

இந்த மருத்துவ முறை இயற்கையான உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதினால் ஆஸ்துமாவின் ஆரம்ப நிலையில் விரைவாகவும், பூரணமாகவும், நாள்பட்ட மற்றும் முற்றிய நிலைகளில் படிப்படியாகவும், ஆஸ்துமா நோயின் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும். ஆஸ்துமா நோயின் தாக்கத்திற்கு ஏற்ப இந்த மருந்துகளை குறிப்பிட காலம் மட்டும் சாப்பிட்டு விட்டு பின்பு நிறுத்தி விடலாம்.

மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போதே ஆஸ்துமா நோயை தூண்டுகின்ற காரணத்திற்காக தவிர்த்து வந்த உணவுகள் மற்றும் பழக்க வழக்க முறைகளை சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை நிலைக்கு கொண்டு வந்து விடலாம்.

யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக பழக்கப்படுத்தி கொண்டால், இவை உடலையும், மனதையும் பக்குவப்படுத்துகிறது.

சில யோக முத்திரைகளை தொடர்ச்சியாக செய்யும் போது, இவை சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது

எந்தவிதமான பின் விளைவுகளும் பக்க விளைவுகளும் இல்லாத இந்த ஒருங்கிணைந்த கூட்டு வைத்திய முறையில் பரம்பரை நோயாக இருந்தாலும் அல்லல்படுத்தும் ஆஸ்துமாவில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெற முடியும்.

×