• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

பெண் கருவுறாமை
(Female Infertility)

கருவுறாமை என்றால், பெண்களால் இயற்கையாகக் கருவுற முடியாததைக் குறிக்கும். அதாவது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும்.

மருத்துவரிதியாக ஒரு பெண் 12 மாதங்கள் எந்த விதமான கருத்தடை செயல்முறைகளை பயன்படுத்தாமல், இயல்பான உடலுறவு கொண்ட பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே அது கருவுறாமை ஆகும்.

மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், அது குழந்தையின்மை என்றும் அழைக்கப்படுகிறது. பெண் கருவுறாமை மிகவும் பொதுவான நிகழ்வு. குறைந்தது 10 சதவீத பெண்கள் கருவுறாமை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

மனித இனப்பெருக்கம் செயல்முறையின் படிகள்

இந்த செயல்பாட்டில் எந்த நிலையிலாவது தடங்கல்,தவறு ஏற்பட்டாலும் கருத்தரிக்காது.

பொதுவான காரணங்கள்

  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
  • உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமைஅதிக வயதில் திருமணம்: 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் இனப்பெருக்கதிறன் படிப்படியாக குறைய தொடங்கும்
  • மரபு பிரச்சனை
  • மோசமான உணவுமுறை
  • நோய்த்தொற்று (Infection)
  • மாதவிடாய் கோளாறுகள்: மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் சீக்கிரம் வருவது , மிகவும் தாமதமாக வருவது, ஒழுங்கற்ற முறையில் இருப்பது மற்றும் முழுமையாக வராமல் இருப்பது போன்றவை சினைப்பைகள், கரு முட்டைகளை வெளியிடுவதில் பிரச்சனை இருப்பதின் அறிகுறிகளாகும்.
  • அதிகப்படியான மன அழுத்தம்
  • தைராய்டு பிரச்சனை (Thyroid problem) மற்றும் பிற ஹார்மோன் பிரச்சனைகள்.
  • பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் (PCOS): சினைப்பை கட்டிகள் என அழைக்கப்படும் இவை வருவதற்கு காரணம், ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் பாலியல் ஹார்மோன்களின் அதிகப்படியான சுரக்கும் தன்மை தான் . இவை தான் பருவமடைவதற்கு உதவுகின்றன, இனப்பெருக்க செயல்பாடு மற்றும் உடல் வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களின் தாறுமாறான செயல்பாடு, சினைப்பைகள் கரு முட்டைகளை வெளியிடுவதைத் தடுக்கின்றன. இதனால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு, உடல் பருமன் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.
  • எண்டோமெட்ரியோஸிஸ் (Endometriosis): கருப்பையின் உட்புற சுவர் எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த எண்டோமெட்ரியம் துண்டுகள் கருப்பை தவிர, சில நேரங்களில் சினைப்பை குழாய்கள், பிறப்புறுப்பு, வயிற்று பகுதி அல்லது குடல் ஆகியவற்றில் உருவாகலாம். இவை இடுப்பு வலி அல்லது கடுமையான மாதவிடாய் பிடிப்புகள், உடலுறவின் போது வலி, மலட்டுத்தன்மை ஆகியவற்றை எண்டோமெட்ரியோசிஸ் ஏற்படுத்துகிறது.
  • கருப்பை கட்டிகள் (Uterine fibroid): கருப்பையின் உட்புற சுவரில் இருந்து தசை மற்றும் இணைப்பு திசுக்களால் உருவாகும் ஒரு கட்டி ஆகும். இந்த கட்டிகள் பொதுவாக புற்றுநோய் அல்ல. கருப்பை கட்டிகளின் அளவு, சிறிய மிளகு அளவில் இருந்து பெரிய கால்பந்து அளவு கூட இருக்கும். எண்ணிக்கையும் ஒன்றிலிருந்து பல கட்டிகள் வரை வளரக்கூடும். இது மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான, வலிமிகுந்த இரத்தப்போக்கு. மாதவிடாய்க்கு இடையில் இரத்தப்போக்கு. அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலுறவின் போது வலி. இடுப்பு வலி. மலச்சிக்கல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
  • சினைப்பை குழாயில் அடைப்பு (Blocked Fallopian tube) : சினைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டால், விந்தணுக்கள் சினை முட்டைகளுக்குச் செல்வதற்கான பாதையும், கருவுற்ற முட்டை கருப்பைக்குத் திரும்பும் பாதையும் தடுக்கப்படும். இது இடுப்பு வலி அல்லது கடுமையான மாதவிடாய் பிடிப்புகள், உடலுறவின் போது வலி, மலட்டுத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

சிகிச்சை முறைகள்

  • நோய் தொற்று இருந்தால் அதற்கான முறையான சிகிச்சை.
  • மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதின் மூலம், கரு முட்டை ஒவ்வொரு மாதமும் வெளிப்பட்டு, கருவுறுதலுக்கு தயாராக இருக்க வைக்கலாம்.
  • மலட்டுத்தன்மைக்கு மனைவி மட்டுமே காரணம் இல்லை, கணவருக்கும் சோதனைகள் செய்து பிரட்சனை இருக்கும் எனில் இருவருமே சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
  • சினைப்பை நீர் கட்டிகள், எண்டோமெட்ரியோஸிஸ், கர்ப்பப்பை கட்டிகள், ஃபலோபியன் குழாயில் அடைப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பல மலட்டுத்தன்மைக்கான காரணங்களை இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முறை மூலம் துல்லியமாகவும், பூரணமாகவும் குணப்படுத்த முடியும்
  • உடல் பருமன், மலட்டுத்தன்மைக்கு முக்கியமான காரணம். உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு , மற்றும் மருந்துகள் என்ற தங்க முக்கோண முறையில் உடல் எடையை குறைப்பதனால் எளிதாக கருவுருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.
  • கல்யாணம் ஆகி இத்தனை மாதம் ஆகி விட்டது இன்னுமா குழந்தை இல்லை என எல்லோரும் கேட்பது, ஜாடைமாடையாக பேசுவது , பார்க்கும் எல்லோரும் இலவசமாக அறிவுரைகள் மற்றும் வைத்தியம் சொல்வது, குடும்ப விசேசங்களில் தள்ளி வைப்பது, மற்ற தம்பதிகளோடு ஒப்பிட்டு பேசுவது, தனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்காதா என்ற ஏக்கம் போன்ற பல்முனை தாக்குதல்களால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்பட்டு அதுவே குழந்தை தரிப்பதற்கு தடையாகவும் அமைகின்றது. இந்த மன அழுத்தத்திற்கு ஹோமியோ மருந்துகள் சிறப்பாக செயல்படுகின்றது.
  • தைராய்டு பிரச்சனை மற்றும் பிற ஹார்மோன் பிரச்சனைகளை, அதன் அடிப்படை காரண காரணங்களை ஒருங்கிணைந்த மருத்துவத்தின் மூலம் சரி செய்வதால், குழந்தையின்மைக்கான பெரும் தடை நீங்குகின்றது.
  • குழந்தை இல்லாத தம்பதிகளில் சுமாராக 100 ல் 30 தம்பதிகளுக்கு குழந்தை தரிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் எதுவுமே இல்லை, அதாவது கணவன், மனைவி இருவருக்குமே மருத்துவரீதியான பிரச்சனைகள் எதுவுமே கிடையாது அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனாலும் குழந்தை தரிக்கவில்லை. முக்கியமாக மருத்துவமே இல்லை என்ற இந்த பிரிவில் உள்ள தம்பதிகள் இருவருக்குமே தனித்தன்மை மருந்துகள் என்ற கோட்பாடு முறையில், இந்த ஒருங்கிணைந்த மருத்துவம் நல்ல பலனை தருகின்றது.
  • கருவுறுதல் செயல்முறைக்கு இடையூறாக இருக்கும் அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தாலும் அதனை ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதா, இயற்கை மருத்துவம், யோகா போன்ற ஆயுஷ் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சைகள் மூலம் உடல் மற்றும் மன தடைகளை தகர்த்து உங்களுக்கும் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.
×